Monday, January 8, 2024

2.ராம நாமாவைக் கூறா நா ஏனடா(கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா)


ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா
(2)
ராம நாமாவே நால்வேதம் ஓதடா (2)
அதன் மேலாக ஓர் யோகம் ஏதடா (2)
ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா

மெய்யில் மெய்யென்று உள்நின்றி..ருப்பதாம்
கண்ணில் எவருக்கும் தோன்றாதி..ருப்பதாம்
தெய்வம் என்றாகும் ஆத்மாவே தானதாம்
அதனைக் காட்டும் பேர் ராம் ராம் ராம் என்பதாம் (2)
ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா

ராமநாமாவைச் சொல்லாயோ நெஞ்சமே
இனி ஆனந்தத்....திற்கேது பஞ்சமே
(2)
ராமநாமாவைச் சொல்லாயோ நெஞ்சமே....
இனி-பிறப்பில்லை..யே கிட்டும் மோக்ஷமே
(2)
ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா

வாழ்வில் எந்நாளும் துன்பங்கள் மோதி யார்
என்று தயை கொண்டு பார்க்காமல் வாட்டும் பார்
(2)
அந்த நோய்போக சொல்வாய் அயோத்தியா (2)
கோயில் கொண்டாளும் ராம்பேரை பக்தியாய் (2)

ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா
(2)
ராம ராம்ராம ராம்ராம ராமராம் 
ராம ராம்ராம ராம்ராம ராமராம்
(2)
ராம ராம்ராம ராம்ராம ராமராம் 
ராம ராம்ராம ராம்ராம ராமராம்
(2)
ராமராம் ராம்ராம ராம்ராம ராமராம் (2)

No comments:

Post a Comment