Tuesday, October 6, 2020

கணபதியும் மாருதியும்

 

கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்
வல்லமையும் வீரத்தையும் தந்திடுமே பாரில்
சீர்மிகுந்த முத்துலக்ஷ்மி நகரில் நல்ல கோயில்
அவனியிலே புகழேந்தி வீதி-திகழ் கோயில்
கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்
வல்லமையும் வீரத்தையும் தந்திடுமே பாரில்
வந்ததுயரம் தனைப் போக்கிட கும்பிடவோர் கோயில்
சிந்தையிலே தினம்=கொண்டிட அழகுதிகழும் கோயில்
ஓய்ந்தமனத்தில் உற்சாகம் தனைக் கொடுத்திடும் கோயில்
சாய்ந்த முகத்தை நிமிர்த்திச் சிரிக்க அருள்தந்திடும் கோயில்
கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்
வல்லமையும் வீரத்தையும் தந்திடுமே பாரில்
ஆனைமுகன் தரிசனத்தைத் தந்தருளும் கோயில்
மாருதியின் அருள்-மனத்தைப் பெற்றுத்-தரும் கோயில்
குலம்-கோத்ரம் பார்க்காது அருள்-புரியும் கோயில்
பாதகத்தைப் போக்கிடுமே பக்தர்-திரளும் கோயில் 
கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்
வல்லமையும் வீரத்தையும் தந்திடுமே பாரில்
சீர்மிகுந்த முத்துலக்ஷ்மி நகரில்நல்ல கோயில்
அவனியிலே புகழேந்தி வீதிதிகழ் கோயில் (2)
வல்லப கணபதி வீர-ஆஞ்சனேயே மூர்த்திக்கி 
ஜெய் 




No comments:

Post a Comment