Friday, November 17, 2023

40. கருடபிரானே (கனவிலும் பழனி)

 

கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
வாஹனமாய் நாரணனை ஏந்திடும் பிரானே (2)
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
அனைத்து-தேவ தேவியர்கள் துதித்தி..டும்-பிரானே
அருளை-வழங்க அமுதக்கலசம் ஏந்தி..டும்-பி..ரானே
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
கருணை-பொங்க அருள்விழியால் பார்த்திடும்-பி..ரானே 
இறக்கை-கொண்டு இடரைக்-கொன்று காத்திடும்-பி..ரானே 
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
விஷத்தின்-கொடுமை முறித்துச்-சிறந்து பறந்திடும் பிரானே 
நாக தோஷம் போக்கி-மோக்ஷம் தந்திடும் பிரானே
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
உடல்நலத்தை அருளி-நோய்கள் போக்கிடும் பிரானே 
மனது ஓங்க ஞானப் பாதை காட்டிடும் பிரானே
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
பட்சிராஜன் கருடபிரான் மகிமை-போற்றி நாமே 
பாடப்-பாட கிடைக்கும்-மீட்சி விலகும்-பாபம் தானே
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (3)


** மேற்காணும் இந்தப் பாடல் சிறப்பு வாய்ந்த கருட மந்திரத்தின் கருப் பொருள் அமைய புனையப்பட்டது**

ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப பெற்றே பல சித்திகளைப் பெற்றார். 

கருட மந்திரம்
-----------------------
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே 
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே 
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய 
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய 
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

கருட மந்த்ரம் பொருளுரை 
--------------------------------------------
அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே,
 இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர்.
இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். 
இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும்.
பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.



இறை இசைப் பாடல்கள் -  I


No comments:

Post a Comment